Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

களமிறங்கும் கமல், சீமான் கட்சிகள்: 5 முனைப் போட்டி

ஏப்ரல் 23, 2019 11:05

சென்னை; விரைவில் நடைபெறவுள்ள 4 தொகுதி இடைத்தேர்தலில் பல்வேறு கட்சிகளும் போட்டியிட திட்டமிட்டு வருகின்றன.அவை சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம்(தனி) ஆகியவை ஆகும். இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. வரும் 29ஆம் தேதி கடைசி நாள் ஆகும். இதையடுத்து 30ஆம் தேதி வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெறுகிறது.  

முன்னதாக 4 தொகுதிக்கான வேட்பாளர்களை திமுக அறிவித்து, தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. இதையடுத்து இன்று(ஏப்ரல் 21) அதிமுக சார்பில் விருப்ப மனு தாக்கல் பெற்றுக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.  

அதன்படி தாக்கல் செய்யப்பட்டவர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு, வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி ஆகியவையும் இடைத்தேர்தலில் களமிறங்குகின்றன. 

இதற்கான வேட்பாளர்கள் குறித்து பரிசீலனை செய்து வருகிறது. விரைவில் பல்வேறு கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவிக்க திட்டமிட்டுள்ளன. முன்னதாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் 5 முனைப் போட்டி நிலவியது.  

இதேபோல் வரும் 4 தொகுதி இடைத்தேர்தலிலும் 5 முனைப் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் மே ஒன்றாம் தேதி முதல் பல்வேறு அரசியல் கட்சிகளும் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளன.

தலைப்புச்செய்திகள்